தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு மிகவும் அதிகரித்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
Categories
மக்களே உஷார்…. யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
