சென்னையில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல சென்னை மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் மற்றும் வழித்தடங்கள் பற்றிய தகவல் அறிவிப்பை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 300 மீட்டருக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும். கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 50 பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 500 பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
Categories
மக்களே…. பேருந்தில் இறங்குவதற்கு 200-300 மீட்டருக்கு முன்னதாக அறிவிப்பு வரும்…. அரசு புதிய அதிரடி….!!!
