2021 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. எனினும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது. அதற்குள் இந்த வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது.
PF கணக்கு:
உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல்:
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி மேலும் கடைசி தேதி நீட்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்வு சான்றிதழ் தாக்கல்:
பென்ஷன் வாங்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்கள் வாழ்வு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். இருந்தாலும் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழை தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை பென்ஷன் தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
PF- ஆதார் இணைப்பு:
PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே UAN எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விடவும். இல்லையென்றால் உங்கள் பிஎஃப் பணம் வருவதில் சிக்கலாகிவிடும்.