தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை “ஸ்மார்ட் ரோட்”என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக சாலைகளில் பல்வேறு ஸ்மார்ட் வசதிகள் அறிமுகமாகிறது. அதிலும் குறிப்பாக இலவச வைஃபை, சிறப்பு நடைபாதை, சைக்கிள் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பாதை, சாலை முழுவதும் சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் 7 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
மக்களே…. நெடுஞ்சாலைகளில் இனி “Free WiFi”…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!
