மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நேற்று முன டெல்லியில் நடைபெ ற்றது. இதில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் தரப்பட்ட 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது தரப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுதான் கருணாநிதி உணவகம். இந்த உணவகங்களை தமிழகத்தின் பேரூராட்சி பகுதிகளில் 500 இடங்களில் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்