Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்..! பொங்கல் பரிசுத்தொகுப்போடு இதுவும்…. வெளியான தகவல்….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.

அதாவது பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பொங்கலுக்கு கொடுக்கப்பட இருக்கும் அரசு சிறப்புத் தொகுப்பில் நெய்யினை சேர்க்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆவின் நெய்யினை தொகுப்பில் சேர்த்தால் அந்நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |