Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த வசதி…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் அனைத்திலும் கழிவறை கட்டாயம் அமைக்கப்படும். கடைக்கு பொருட்கள் வாங்க காத்திருப்போர் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |