Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! வீட்டில் கிளி வளர்த்தால்…… 6 மாத சிறை தண்டனை….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் மக்களிடையே கிளி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே பச்சைக்கிளிகளை வளர்ப்பதும், விற்பதும் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சமீப காலமாகவே ஆன்லைனிலும் நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளியை வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெற்று அன்பாக பழகுவதன் காரணமாகவே பலரும் கிளிகள் வளர்க்க விரும்புகிறார்கள்.

இதனால் இளியை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வளர்த்து வருகின்றனர். இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடிக்கு 2000 முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து கோவை வனசரகார் அருண்குமார் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவை மறுவாழ்வு மையத்தில் மீட்கப்பட்ட சுமார் 400இக்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது இவை அனைத்துமே வீடுகளில் வழங்கப்பட்டவைதான்.

வளர்ப்பவர்களிடம் விசாரித்தால் இது குற்றம் என்று எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். எனவே இனிவரும் காலங்களில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். ஆன்லைனில் நேரடியாகவோ கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால் ஆறு மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |