கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
கேரளா மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள ஆலம்புழாவில் அமைந்துள்ள பண்ணையில் சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை செய்தபோது அந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. ஆனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் பறவை காய்ச்சலின் எதிரொலியாக மாநில அருகே உள்ள கோவை மாவட்ட எல்லையான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைகட்டி, பட்டிச்சாலை, தோலம்பாளையம் போன்ற பல சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பாக கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றி சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு மறு அறிவிப்பு வரும் வரை இந்த கண்காணிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.