Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்திற்கு புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா முழு ஊரடங்கு…???

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும்  கடுமையாக வாய்ப்பு  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தொற்றின்  தாக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பல்வேறு தளர்வுகள்  வழங்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 50,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்கள்  தவறாமல் தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொண்டு செலுத்தி  கொள்ளலாம் என தமிழக அரசின் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் ,தொகுதி பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நோய் தடுப்பூசி முகாம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.  அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொற்று  குறைந்தாலும் மக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இரண்டாவது தடுப்பூசி போடாதவர்கள் விரைவில் போட வேண்டும்.  கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அண்டை நாடுகளில் தொற்று தீவிரமாக  தான் இருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியம்  நிலைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உக்ரைனில் இருந்து 1,890 மாணவர்கள் தமிழகம்அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 1,524 மாணவர்கள் தமிழக அரசின் செலவிலும் 366 மாணவர்கள் அவர்களின் சொந்த செலவிலும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார். இதற்கிடையில் கொரோனா  பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில்  புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இது கடுமையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |