Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… செல்போன் பயன்படுத்த தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். பொது மக்கள் வாக்களிக்க தைரியமாக வரவேண்டும். அவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 23,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |