சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மாகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர் காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் உடன் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு சீனாவில் உள்ள மக்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போது இந்த வைரஸ் பற்றி மருத்துவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் லங்கையா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாக சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 2019 ஆம் வருடம் லங்கியா வைரஸ் முதன் முதலில் மனிதர்களிடையே கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.