தேனியில் ஒரே நாளன்று 456 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பொதுமக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனியில் ஒரே நாளன்று 456 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 22,231 ஆக அதிகரித்துள்ளது.