வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மண்மலை பாலக்காடு முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது அந்த செல்போன் எண்ணுக்கு முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி முத்துக்குமார் 15 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த பணமும், அதற்கான கமிஷன் தொகையும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துகுமார் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.