இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கும் கால அவகாசம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.
அதில் LINK Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
பான் இணைப்பு பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதாரில் இருந்து வரும்.
உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லை என்றால் இவ்வாறு உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக்கொள்ளலாம்.