சென்னை மெட்ரோ ரயில் 5ம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இடையில் செம்மொழி சாலையில் நடைபெற்று இருக்கிறது. இதனால் செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து மேடவாக்கம் செம்மொழி சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் தற்போது பள்ளிக்கரணை போலீஸ் நிலைய சந்திப்பு வழியாக செல்கின்றன.
இதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் பெரும்பாக்கம் செம்மொழி சாலையிலிருந்து வேளச்சேரி பிரதான சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்கள் டிஜிட்டல் மார்ட்டிலிருந்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக அனைத்தும் வாகனங்களும் டிஜிட்டல் மார்ட் சந்திப்பு இடதுபுறம் திரும்பி ராதா நகர் பிரதான சாலை, மாம்பாக்கம் வழியாக மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.