Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்!….. “மார்பில் பச்சை குத்தியிருப்பார்”….. போலீசார் விடுத்த எச்சரிக்கை….!!!!

கனடாவில் ரொறன் ரோவில் லியோன் டைரில்(38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை என்று க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் லியோன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் லியோனை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லியோன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் சதீஷ்குமார் ரயன் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் ஆறடி, ஒரு அங்கம் உயரம், மெல்லிய உடல் அமைப்பு, பழுப்பு நிற கண்கள், இரு புறமும் மொட்டை அடிக்கப்பட்ட கருமையான கூந்தல் , அவர் மார்பு மற்றும் தோள்கள் இரண்டிலும் பச்சை குத்தியுள்ளார் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ராஜரத்தினம் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாளர் மற்றும் ஆபத்தானவர் என்று கருதப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொண்டு அது குறித்து கூறலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |