Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுவையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக ஜனவரி 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டிசம்பர் 24-ஆம் தேதி இரவு தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட டிசம்பர்-24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி ஜனவரி 12-ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும். டிசம்பர் 30,31 ஜனவரி 1-ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையிடம் அனுமதி பெற்று புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் நேர மதுக்கடைகள் மட்டும் திறக்கலாம்.

Categories

Tech |