Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….வீடு தேடி ரேஷன் வினியோகம்….மாநில அரசின் மாஸ் அறிவிப்பு…!!!

மக்களுக்கு வீடு தேடி ரேஷன் வினியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 வாரங்களில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பஞ்சாப் மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவுள்ளதாக ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை தொடர்பு கொண்டு, ரேஷன் பொருள்களை அலுவலர்கள் அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை மக்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |