கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு கடன் தொகை 3,500 ரூபாய் உயர்த்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள், தங்க நகை அடமானக் கடன்கள் வழங்கி வருகிறது. மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3,500 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. அதனை பின்பற்றி மற்ற மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கி வருகிறது.
ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும் இடையேயான போர் காரணமாக உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தலைமை கூட்டுறவு வங்கியில் நேற்று முதல் ஒரு கிராம் தங்கத்தின் மீது கொடுக்கப்படும் கடன் தொகை 3,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி மற்ற வங்கிகளும் தங்கம் மீதான கடன் தொகையை உயர்த்த இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.