Categories
உலக செய்திகள்

“மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யவில்லை”…. விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

மேலும் அதிகாரப் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகம், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

Categories

Tech |