மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 215 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23.003 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.அதுமட்டுமன்று 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3,107 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.