Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகாபாரதத்தை 48 மணி நேரம் எழுதி…… அசத்தல் சாதனை செய்த மாணவி….. குவியும் பாராட்டு….!!!!

மகாபாரதத்தை தொடர்ந்து 48 மணி நேரம் எழுதி சாதனை படைத்த மனைவியை அழைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே தும்பனாபட்டி மோரிகள் பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் கோவையில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மே மாதம் தனியார் கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு மகாபாரதத்தை 48 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்துள்ளார்.

இதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்து அந்த மாணவிக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அம்ரித் மாணவி அபிநயாவை அழைத்து வாழ்த்து கூறினார். இது குறித்து மாணவி கூறும் போது இந்திய புக் ஆஃப் ரெகார்ட் அமைப்பு சாதனையை அங்கீகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது . இதன் மூலம் மேலும் சாதனை படைக்க முயற்சி செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |