Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை வீட்டில் விட்டு சென்ற தாய்….. விளையாடிய சிறுமிக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவபிரீத்தி(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற பிறகு உடல் நலம் சரியில்லாத சரஸ்வதி அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமி சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் கழுத்தை சேலை இருக்கிறதால் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜீவபிரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த சரஸ்வதி நீண்ட நேரமாக கதவை தட்டினார். ஆனாலும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக சரஸ்வதி எட்டி பார்த்துள்ளார். அப்போது தனது மகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |