Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. முன்னாள் ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு முகம்மதியாபுரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, 2 லட்ச ரூபாய் பணம், 24 பட்டுப்புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |