தாய் மகளை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள செம்படாபாளையம் பகுதியில் தண்டபாணி- பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே நிலபிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் பாப்பாத்தி தனது மகளுடன் நடந்து சென்ற போது செல்வம், அவரது மனைவி தவமணி ஆகியோர் தாய் மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த நந்தினியும் பாப்பாத்தியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பெயரில் செல்வம் மற்றும் தவமணி ஆகிய இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.