தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்டம் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய ஒரு உதவி அழைப்பு மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு எந்தவிதமான இன்னல்களும் குறு நிதி, கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஏற்படக்கூடாது என கூறியுள்ளார்.