Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுக்கள்: விறுவிறுப்புடன் நடைபெறும் தேசியக்கொடி தயாரிக்கும் பணி….!!!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சுதந்திரதின விழா வெகு விமர்சையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துமாறு பிரதமர் உட்பட பல தலைவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் நாடு முழுதும் சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடி தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடைபெறுகிறது. ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச ரஜோரி மாவட்ட பெண்கள், சுதந்திரதின கொண்டாட்டத்துக்காக தேசியக் கொடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ரஜோரி மாவட்டத்தில் மொத்தம் 20,000 கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக தேசியக் கொடியை தயாரிக்கும் பணியானது விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இது தொடர்பாக மகளிர் சுயஉதவிக் குழுவை சார்ந்த ஒரு பெண் கூறியதாவது “என் குழுவுக்கு 2000 கொடிகள் தயாரிக்க இலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அவை அந்த பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும். நாங்கள் முழு உற்சாகம் மற்றும் ஆர்வத்துடன் இந்த கொடிகளை உருவாக்குகிறோம். இதுவரையிலும் 500-1000 கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Categories

Tech |