முதியவர் ஒருவர் மகளின் வீட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் வெங்கட்ரமனப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தீட்சிதராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், மகள் தன்னுடைய கணவருடன் தேவனஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த வெங்கட்ரமனப்பா அடிக்கடி தன்னுடைய மகளைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று அவர் தன்னுடைய மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகில் 10 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சிறுமியை பார்த்த வெங்கட்ரமனப்பா அவரை மகளின் வீட்டிற்குள் அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கட்ரமனப்பாவை கைது செய்துள்ளனர்.