Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது” கட்டிட தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவில் சுப்பையா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முக்கூடல்- கடையம் மெயின் ரோட்டில் சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பையாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரது மகளுக்கும், சுப்பையாவின் மகன் மாரிமுத்துவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனின் மகள் தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதனால் மகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நினைத்து கோபத்தில் இருந்த மாரியப்பன், தனது மகன் குட்டி என்பவருடன் இணைந்து சுப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து மாரியப்பன் மற்றும் குட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |