பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் அழகப்பபுரம் புதிய தெருவில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதினரின் மூத்த மகனான மகாராஜன் என்பர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை நினைத்து மன வருத்தத்தில் இருந்த மாரியம்மாள் வாழ்க்கை வெறுத்து விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த மாரியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.