Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்ணாத்திபட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயம்மாள்(35) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களது மகன் தமிழரசு என்பவர் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து தாயம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாயம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |