Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தொட்டியகுளம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கந்தசாமியை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த   அக்கம்பக்கத்தினர் கந்தசாமியை  மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |