Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்குண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |