கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் வடபாகம் பகுதியில் சிவகாமி(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ்குமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத குமாரை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிதிஷ்குமார் பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.