வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி ரயில்வே பீடர் சாலையில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பழனியை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.