Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. தடுத்து நிறுத்திய போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் வந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், சிறுவன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் சின்னகலையம்புத்தூர் பகுதியில் வசிக்கும் நிர்மலா என்பதும், உடன் வந்த சிறுவன் 11 வயதுடைய நிர்மலாவின் மகன் என்பதும் தெரியவந்தது. நிர்மலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் வேறு ஒருவருக்கு வீட்டை விற்பனை செய்துள்ளார். அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்க வந்த நிர்மலா விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் நிர்மலாவை மனு கொடுக்க வைத்தனர்.

Categories

Tech |