Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மகனுக்கு பேச்சு வரவில்லை” தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு யாழ்மணி தேவா(6) என்ற மகனும், யோக வர்ஷினி(2) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் யாழ் மணி தேவாவிற்கு பிறந்ததிலிருந்து பேச்சு வரவில்லை. இதனால் சிறுவனுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் சிறுவன் பேசவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த உமா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |