Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மகனுக்கு பாரமாக இருக்கிறேன்” மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே வடகால் பகுதியில் கஸ்தூரி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி மகனுக்கு பாரமாக இருப்பதாக எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாக கிணற்றில் விழுந்து கஸ்தூரி தற்கொலை செய்துள்ளார்‌.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிப்காட் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |