Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனின் திருமணத்தை ஏற்க முடியாமல்…. தாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனின் காதல் திருமணத்தை ஏற்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பத்மா தற்போது பூ வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மகன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை ஏற்க முடியாமல் பத்மா மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பத்மா மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பத்மாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Categories

Tech |