Categories
சினிமா

ப்ளீஸ் வெளியே போய் பேசுங்கள் சார்!…. மேடையில் காண்டான டிரைக்டர் மிஷ்கின்….!!!!

இசையமைப்பாளர், நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு கொலை என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து உள்ளார். அத்துடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இவற்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது “தயாரிப்பாளர் தனஞ்செயன் சில தினங்களுக்கு முன் அழைத்து ஒரு விழாவிற்கு நீங்கள் கெஸ்டாக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். படம் பெயர் என்ன என கேட்டதற்கு கொலை என தெரிவித்தார். அவ்விழாவுக்கு நான்தான் பொருத்தமான விருந்தினர் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் பாலாஜியை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியும். இதனிடையில் ஒரு சந்திப்பில் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தபோது ஆழமாக பேசக்கூடியவர் என்பது தெரிந்தது.

படத்தின் டிரைலர் பார்த்தேன் சிறப்பாக இருக்கிறது. இசையமைப்பாளராக இருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்து இருப்பது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. கொலை திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைவதற்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார். இதனிடையில் மிஷ்கின் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறம் இருந்த சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கடுப்பான மிஷ்கின் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, பேச வேண்டுமெனில் வெளியே போய் பேசுங்கள் சார் ப்ளீஸ் என கோபமாக கூறினார்.

Categories

Tech |