Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட பெண்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்….. திருச்சியில் சோகம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பகுதியில் பிரபு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கஸ்தூரி தனது வீட்டிலிருந்த ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டுள்ளார்.

இதனால் மயங்கி கிடந்த கஸ்தூரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |