கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டின் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பிய பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றது. இதனால் போதை கடத்தல் கும்பல் பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்ட அதிபர் கஷ்டாவோ பெட்ரோ கூறியுள்ளார்.
மேலும் கொலம்பியாவின் தென்மேற்கு பகுதிகளில் உள்ள ஹூய்லா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென போலீசார் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தப்பி ஓடி சென்று உள்ளனர். இந்த தாக்குதலில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த எட்டு போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அந்த நாட்டில் அமைதிக்கு எதிரான நாச வேலை என அந்த நாட்ட அதிபர் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல தெரிவதாக பிராந்திய போலீஸ் செய்து தொடர்பாளர் கூறியுள்ளார். கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதல் நடத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகப்படுகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் ஒரு பெருபேற்க்கவில்லை.