காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் பாண்டியன் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்திருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாண்டியன்நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் 3 கிலோ 600 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.