Categories
உலக செய்திகள்

போலீசிடம் இருந்து தப்பிக்க…. சட்டென நதியில் குதித்த லண்டன் நபர்…. பின் நடந்த சோகம்…..!!!!

தென் மேற்கு லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தேம்ஸ் நதியில் குதித்து மரணமடைந்த இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிய அந்த இளைஞர் தேம்ஸ் நதியில் குதித்ததில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது பில்பி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது Liam Allan என்பவர் தான் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க தேம்ஸ் நதியில் குதித்தார். இதையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு 2 மணிநேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

திருட்டு குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே, Liam Allan தேம்ஸ் நதியில் குதித்துள்ளார். முன்னதாக அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று கிங்ஸ்டன் பிரிட்ஜில் ஒரு ஆணும், பெண்ணும் வாய்த் தகராறில் ஈடுபடுவதை அறிந்து காவல்துறையினர் விசாரிக்க முடிவுசெய்துள்ளனர். அந்த விசாரணையில் திருட்டு தொடர்பான வாக்குவாதம் என தெரியவர, காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்ய முடிவுசெய்தனர்.

ஆனால் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய அந்த இளைஞர் சட்டென்று நதியில் விழுந்துள்ளார். அதன்பின் தேடுதல் நடவடிக்கையின் இறுதியில் இளைஞரை சடலமாக மீட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இப்போது சம்பவத்தின்போது பதிவான காணொளி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளதாகவும், அதன் பிறகே அடுத்தகட்ட விசாரணை தொடர்பில் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |