Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் எச்சரித்து அனுப்பியதால்…. கொத்தனார் செய்த செயல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

போலீசார் எச்சரித்ததால் மனமுடைந்த கொத்தனார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் காலனியில் இலங்கேஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு செயசுதா என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இலங்கேஸ் மது அருந்திவிட்டு செயசுதாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயசுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் இலங்கேஷை காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த இலங்கேஸ் காவல்நிலையத்தில் இருந்து சென்று புத்தேந்தல் பேருந்து நிலையம் அருகே வைத்து விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இலங்கேஷை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |