Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத தம்பதியினர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

போலீசாரின் கால் விழுந்து தம்பதியினர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மன்னவராதி பகுதியில் வசிக்கும் தெய்வ முருகன்-மணிமேகலை தம்பதியினர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அந்த தம்பதியினர் திடீரென நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த போலீசரின் காலில் விழுந்து தங்களது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து செய்ததோடு, தங்களையும் மிரட்டுவதாக கூறி கதறி அழுதனர்.

இதனை அடுத்து நிலத்தை மீட்டு கொடுத்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |