Categories
மாநில செய்திகள்

போலி பட்டா விவகாரம்….. தாசில்தாருக்கு ஐகோர்ட் அதிரடி செக்….!!!!

முதியவருக்கு சொந்தமான ஒரு இடத்தை போலி பட்டா தயாரித்து வேறு ஒரு பெயருக்கு மாற்றியது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை  மாவட்டம், காட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் முதியவர் தட்சிணாமூர்த்தி இவர் கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வாங்கியதாகவும், அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து வருவதாகவும், தன்னுடைய நிலத்தின் அருகே இருந்த சுப்ரமணியன் என்பவர் சொந்த நிலத்தில் இருந்து 900 சதுர அடிக்கு நிலம் வாங்கியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இதில் தாசில்தாருக்கு லஞ்சம் வழங்கி கூட்டு சேர்ந்துதான் வாங்கிய இடம் மற்றும் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு பகுதியை போலி பட்டா தயாரித்து சுப்ரமணியன் மகன் பெயருக்கு மாற்றியதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணைக்கு அழைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கோரியும் , போலி சான்று அளித்து கூட்டு பட்டாவில் சுப்பிரமணியத்தை இணைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தண்டபாணி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த ஏதேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால் ராணிப்பேட்டை தாசில்தார் மற்றும் சுப்ரமணியன் மீது 12 வாரங்களில் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Categories

Tech |