Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலி அழைப்பை நம்பி…. பணத்தை பரிகொடுத்த ஆசிரியர்…. சைபர் கிரைம் போலீஸ் விசாரணை….!!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆசிரியரிடம் 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி மோகனின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.இருந்து என் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் பேசுவதாக கூறினார். இதனையடுத்து மோகனின் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தி வழங்குவதாகவும், டெபிட் கார்டுகளில் உள்ள பாயிண்டுகளை பணமாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மோகன் அந்த மர்மநபர் கேட்ட விவரங்களை கூறினார். இதனையடுத்து அவர் அழைப்பை துண்டித்த சிறு வினாடிகளிலேயே மோகனின் கிரெடிட் கார்டிலிருந்த 63 ஆயிரம் ரூபாயையும், டெபிட் கார்டில் இருந்த பாயிண்டுகளை வைத்து 25 ஆயிரம் வரையிலும் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் உடனடியக மாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மோகனுக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |