Categories
உலக செய்திகள்

போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனுக்கு “நிவாரண பொருட்கள்”…. உதவிக்கரம் நீட்டிய சீனா….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா நடுநிலை நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது. அதுமட்டும்மல்லாமல் பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பையும் சீனா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறியபோது “உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உட்பட 50 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி) மதிப்பிலான நிவாரண பொருட்கள் உக்ரைனுக்கு வழக்கப்படுகிறது. இதனுடைய முதல் தொகுதி இன்று பீஜிங்கில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ளவை தகுந்த வழிகளில் உக்ரைன் செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்படும்”என்று கூறினார்.

Categories

Tech |